Nagaratharonline.com
 
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் 7 பெண்களிடம் நகைகள் பறிப்பு  Jun 10, 14
 
கும்பாபிஷேக விழாவில் திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை பயன்படுத்திய ‘மர்ம’ ஆசாமிகள் பெண்களிடம் நகை பறித்து சென்றுவிட்டனர். இந்திரா (வயது64) என்பவரிடம் 4 பவுன் நகையும், கண்ணத்தாள் (73) என்பவரிடம் 2 பவுன் நகையும், சாரதா (35) என்பவரிடம் 2 பவுன் நகையும் பறிக்கப்பட்டது.

அதுபோல முத்தாயி என்பவரிடம் 4 பவுன் நகையும், சாந்தியிடம் 5 பவுன் நகையும், தனம் (54) என்பவரிடம் 4 பவுன் நகையும், அலமேலு ஆச்சி என்பவரிடம் 2 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நகை பறிகொடுத்த 7 பெண்களும் திருகோஷ்டியூர் போலீசில் புகார் செய்துள்ளனர்.