Nagaratharonline.com
 
கல்லல் சோமசுந்தரம் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு  Jun 3, 14
 
கல்லல் சோமசுந்தரம் நகரில் குடிநீர் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பைப் மட்டும் உள்ளது. 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் குறைந்தளவே தண்ணீர் வருகிறது.

இரண்டு மணி நேரம் வழங்கப்படும் நீர் அனைவருக்கும் கிடைக்கும் முன் நிறுத்தப்படுகிறது. தண்ணீர் பிடிக்கும் இடத்தில் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. அவைருக்கும் குடிநீர் கிடைக்கும் அளவிற்கு மேலும் இரண்டு இடங்களில் பைப் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.