Nagaratharonline.com
 
பொன்னமராவதி கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பறிமுதல்  Jun 2, 14
 
பொன்னமராவதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரி பைகள் மற்றும் பிளாஸ்ட்டிக் கப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்,

பல்வேறு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய 41மைக்ரானுக்கு குறைவான கேரி பைகள் மற்றும் கப்பு 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய ரூ.1200 மதிப்பிலான பான்பராக், சாந்திபாக்கு, கணேஷ் மற்றும் குட்கா பறிமுதல் செய்தனர். மேலும் பயன்பாட்டிற்கு உதவாத வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். இதில் பேரூராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.