Nagaratharonline.com
 
நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு துவக்கம்  May 27, 14
 
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டு முதல் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் எனும் புதிய பாடப்பரிவு தொடங்கப்படவுள்ளதாக கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தெரிவித்தார்.

கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி பட்டப்படிப்பில் விஷுவல் கம்யூனிகேசன் எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப் படுகிறது. இப்பாட வகுப்பில் பாடங்கள் நடத்த பிரபல கலைஞர்கள், இயக்குநர்கள் எஸ்பி. முத்துராமன், ஞான ராஜசேகரன், எடிட்டர் பி. லெனின் போன்றவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியில் மாணவியர்களுக்கான விடுதியும் தொடங்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு நர்சிங் கல்லூரி தொடங்கப்படவுள்ளது.