Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டியில் நகை பறிப்பு  May 27, 14
 
நேமத்தான்பட்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை, 32. இவர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, கோனாபட்டில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, நடந்து வந்த மூன்று பேர், இவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் செயினை பறித்து தப்பினர். செட்டிநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.