Nagaratharonline.com
 
காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் மண்டப சாரம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் காயம்  May 24, 14
 
காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் நடைபெற்றுவரும் திருப்பணியில் வெள்ளிக்கிழமை முகப்பு மண்டபத்தில் சாரம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நகரச்சிவன் கோயிலில் 48-க்கு 42 அளவுள்ள முகப்பு மண்டபப் பணிக்காக செட்ரின் அமைக்கப்பட்டுபணி நடைபெற்றது.

இப்பணிக்காக வந்திருந்த மொத்தம் 24 தொழிலா ளர்களில் 14 பேர் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 10 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் சுமார் 2.30 மணியளவில் சாரம் சுமை தாங்காமல் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.