Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் காலாவதி குளிர்பானங்கள் பறிமுதல்  May 21, 14
 
பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலாவதி தேதியில்லாத குளிர்பானங்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் உள்ள குளிர்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளிர்பானக் கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்த ரூ.1500/- மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.