Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி பூவாளம் ஆற்றில் பெருமாள் இறங்கினார்  May 15, 14
 
நாட்டரசன்கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் சார்பில் பூவாளம் ஆற்றில் பெருமாள் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் நாட்டரசன்கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி உத்ஸவத்தையொட்டி புதன்கிழமை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கும் வைபவம் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர். மாலையில் திருமஞ்சனமும், தொடர்ந்து பக்தி உலாத்துதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு தசாவதாரம் நிகழ்வும் நடைபெற்றது.