Nagaratharonline.com
 
நெற்குப்பை நல்லூரணி மேல்கரையில் மரக்கன்று நடும் விழா  May 12, 14
 
நெற்குப்பையில் உள்ள நல்லூரணி மேல்கரை நடைபாதையைச் சுற்றி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி தலைவர் சஞ்சீவி தலைமை தாங்கினார், செயல் அலுவலர் வீரன் முன்னிலை வகித்தார். விழாவில் ஊரணி நடைபாதையை சுற்றி 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளி, கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன், உறுப்பினர்கள் செல்வராஜ், பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் தியாகராஜன், தனம், சேக்குராமன், துப்புரவு மேற்பார்வையாளர் சேரலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.