Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் மாணவி AL.அலமேலு +2 தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடம் மற்றும் மாவட்டத்தில் முதலிடம்  May 11, 14
 
 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அலமேலு, இதயநோய் மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவையாற்றப் போவதாகத் தெரிவித்தார்.

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி AL.அலமேலு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1192 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அழகப்பன் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். தாய் சொர்ணவள்ளி. சகோதரி மீனாட்சி 7ஆம் வகுப்பும், சகோதரன் பழனியப்பன் மூன்றாம் வகுப்பும் ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி அலமேலு கூறியது:

இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் படித்து வந்துள்ளேன். பள்ளி ஆசிரியர்கள் கற்றுத் கொடுக்கும் பாடங்களை அந்தந்த நாளிலேயே படித்து முடித்து விடுவேன். மேலும் பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர்களின் உந்துதலே மாநில அளவில் இரண்டாமிடம் பெறக் காரணம். மருத்துவப் படிப்பில் சேர்ந்து இதய நோய் நிபுணராக வேண்டும் என்பதே லட்சியம். மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றார் அவர்.

மாணவி அலமேலு பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 197, ஆங்கிலம் 196, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியியல் 199, கணிதம் 200, மொத்தம் 1192.
**************

நமது சமூகத்தை சேர்ந்த திரு. அழகப்பன் (காரைக்குடி) புதல்வி AL.அலமேலு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்ட அளவிலும் இந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.(அலுமேலு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்றார்.)

நம் நகரத்தார் மாணவர் மாணவிகளும் இதுபோல் நன்றாக படித்து, பெற்றோர்க்கும் நகரத்தார் இனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

மாணவி அலமேலுவை nagarathargateway.com வாழ்த்துகிறது !
Editor.