Nagaratharonline.com
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு  May 10, 14
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரின் பல்வேறு பகுதியினர் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்து பட்டமரத்தானுக்கு செலுத்தி வழிபட்டனர். புதன்கிழமை பேரூராட்சி, அஞ்சல்துறை சார்பில் பட்டமரத்தானுக்கு பூக்கள் சாத்தி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை புதுவளவு வீதியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று பட்டமரத்தானுக்கு பூக்கள் சாத்தி வழிபட்டனர். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை பணியாளர்களால் பூக்கள் சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.