Nagaratharonline.com
 
ரயில் முன்பதிவு செய்ய, அசல் அடையாள அட்டை  May 6, 14
 
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய, அசல் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளின் பகுதியாக, ரயிலில் பயணம் செய்ய, முன்பதிவின் போது, பயணிகள் தங்களின் அசல் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் எனவும், மற்றும் இணைய தளத்தில் முன்பதிவு செய்பவர்களும் மத்திய, மாநில அரசுகளின் புகைபடத்துடன் கூடிய அசலான அடையாள அட்டைகளை சமர்பிக்க வேண்டும், என தெற்கு ரயில்வே நேற்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.