Nagaratharonline.com
 
நெற்குப்பை பூலாம்பட்டி கிராமத்தில் வெடிபொருள்கள் பறிமுதல்  May 2, 14
 
நெற்குப்பை பூலாம்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நெற்குப்பை பேரூராட்சிக்குள்பட்ட பூலாம்பட்டி கிராமத்தில் இப்ராகிம்ஜாபர் என்பவரது தோட்டத்தில் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து ஆய்வு மேற்கொண்டதில் சேலத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வீரண்ணன் (40), நாராயணன் மகன் கனகராஜ்(24) ஆகியோர் 13 டெட்டனேட்டர், 18 ஜெலட்டின் குச்சியுடன் பிடிபட்டனர்.

இவர்களுடன் நடத்திய விசாரணையில் இலுப்பூரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் வெடிபொருள்கள் வாங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து நெற்குப்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து வெடிபொருள் விற்பனை செய்த பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வெடிபொருள்கள் கிணறு தோண்டுவதற்காக கொண்டுவரப்பட்டது எனத் தெரியவருகிறது.