Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கோடை வெப்பத்தை சற்றே தணித்த சாரல்  May 2, 14
 
பொன்னமராவதியில் கோடையின் தாக்கத்தை சற்றே தணிக்கும் வகையில் கடந்த இரு நாள்களாக பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக கோடையின் உக்கிரத்தை தாங்க இயலாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

சாலைகளில் பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை மாலை வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது.

பெரிய மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களை சாரல் மழை ஏமாற்றியது. அதேபோல வியாழக்கிழமை மாலை பெய்த சாரல் மழை கோடை வெப்பத்தை சற்றே தணித்து மக்களை குளிர்வித்தது.