Nagaratharonline.com
 
வேந்தன்பட்டி:மரக்கன்றுகள் நடும் விழா  Jan 20, 10
 
பொன்னமராவதி, ஜன. 19: பொன்னமராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டி நந்திகோயில் ஊரணி வளாகத்தில் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. குணசேகரன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் க. ஜெயராமன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சி. ராஜு மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடக்கி வைத்தார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட நாட்டு நலப் பணித் திட்ட தொடர்பு அலுவலர் சி. முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.

பள்ளி ஆசிரியர் வி. சங்கரநாராயணன் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஏ. சக்திவேல் வரவேற்றார். நிறைவாக உதவித் தலைமை ஆசிரியர் எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Source:Dinamani