Nagaratharonline.com
 
தஞ்சையில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள்: விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி  Mar 6, 14
 
ஞ்சாவூரில் ஒரே டிராக்கில் எதிரெதிரே இரு ரயில்கள் வந்தன. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.45க்கு திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயில் 4 வது பிளாட்பாரத்தில் நின்றது. அப்போது, சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் விரைவு ரயிலும் எதிரே வந்தது. இந்த ரயில் சிக்னலைக் கடந்து 3வது பிளாட்பாரத்தில் செல்ல வேண்டும். ஆனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், இந்த ரயிலும் 4 வது பிளாட்பாரத்தை நோக்கியே சென்றது. கடைசி நேரத்தில் இதனை உணர்ந்த ரயில் டிரைவர், சாமர்த்தியமாக வண்டியை நிறுத்தினார். இதனால், காரைக்கால் ரயிலுக்கு சுமார் 200 அடி தொலைவில் இந்த ரயில் நின்றது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தபோதும், பாதுகாப்பாக தப்பியதால் நிம்மதி அடைந்தனர்.