Nagaratharonline.com
 
சிங்கம்புணரியில் டாக்டருக்கு வெட்டு: ஒருவர் கைது  Mar 2, 14
 
சிங்கம்புணரியில் உமா கிளினிக் நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன்,60, இவருடைய கிளிக்கிலேயே ஸ்கேன் வசதியும் உள்ளது. நேற்று இரவு 8.30 மணிக்கு இவரது கிளினிக்கிற்கு டூவீலரில் வந்த இருவர், உள்ளே வந்து டாக்டரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுத்த டாக்டருக்கு இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது. அவருடைய சத்தத்தை கேட்ட மக்கள் வெளியே வந்த இருவரையும் விரட்டியதில் ஒருவர் தப்பி விட்டார்.

கொட்டாம்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் பிடிபட்டார். மது போதையில் இருந்த அவரிடம் விசாரித்ததில், இவருடைய உறவினர் ஒருவருக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனர். 5ம் முறை கர்ப்பமான பெண்ணை இவருடைய கிளிக்கினில், ஸ்கேன் செய்து பார்த்ததில், ஆண் குழந்தை என தெரிவித்ததாகவும், ஆனால் 5ம் முறையும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரமடைந்த நாங்கள் அவரை வெட்டினோம் என தெரிவித்துள்ளார். அவரை சிங்கம்புணரி போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.