Nagaratharonline.com
 
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி 5 ஆயிரம் கி.மீ., நடைபயணம்  Feb 23, 14
 
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, டில்லியை சேர்ந்த தேவேந்தர், என்ற பட்டதாரி வாலிபர், டில்லியில் இருந்து ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். டில்லியை சேர்ந்தவர் தேவேந்தர்,34, எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், மதத்தால் வேறுபட்ட, நம் நாட்டின் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என, வலியுறுத்தி, டில்லியில், ஆகஸ்ட் 12ம் தேதி, நடைபயண யாத்திரையை துவக்கினார். ஆறு மாதங்களில், 5,000 கி.மீ., நடைபயணம் முடித்துள்ளார்.

காரைக்குடி, அமராவதிபுதூர் வழியே சென்ற அவர் கூறியதாவது: மதத்தால் வேறுபட்டாலும், இந்தியா என்ற அளவில், நாம் அனைவரும் ஒன்றே. நம்மிடையே ஒற்றுமை தழைக்க வேண்டும். அதற்காக இறைவனை வேண்டியும், கலாசாரத்தால் மாறுபட்ட, பலதரப்பட்ட மக்களை சந்திக்கும், நோக்கில் இப்பயணத்தை துவங்கியுள்ளேன். ராமேஸ்வரத்தில் பயணம் நிறைவு பெறும், என்றார்.