Nagaratharonline.com
 
நாட்டரசன் கோட்டையில் தங்கத்தை திருடி"கவரிங்' வைத்த கண்டக்டர் கைது  Feb 22, 14
 
நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் வள்ளியம்மை ஆச்சி,70. இவரது மகள் காரைக்குடியில் வசிப்பதால், நாட்டரசன்கோட்டையில் தனியாக இருந்தார்.
சில நாட்களுக்கு முன், இவரது 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை காரைக்குடியில் அடகு வைக்க சென்றார். அப்போது, 3 பவுனும் "கவரிங்' நகை என, தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மை வீட்டில் பீரோவில் வைத்திருந்த சாமி நகை 3 பவுனை பார்த்தபோது, அதையும் காணவில்லை. யாரோ மர்ம நபர் 6 பவுனையும் திருடியுள்ளதும், சாமி நகை தவிர, செயின், தோடுகளுக்கு பதிலாக "கவரிங்' நகையாக மாற்றி வைத்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்தது.

வள்ளியம்மை தாலுகா ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ.,செல்வகுமார், ஏட்டு வெள்ளச்சாமி விசாரித்தனர். வள்ளியம்மை வீட்டில் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த தனியார் பஸ் கண்டக்டர் அந்தோணி சகாயராஜ்,30, வள்ளியம்மை வீட்டில் இல்லாத போது, நகை வைக்கும் இடத்தை கண்டறிந்து, அவற்றை திருடி,கவரிங் நகைகளை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது.அந்தோணி சகாயராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.