Nagaratharonline.com
 
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வரி வசூலிப்புக்கு எதிர்ப்பு  Feb 14, 14
 
திருச்சி - காரைக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு வரி வசூலிப்பதற்காக கீரனூர் அருகே லட்சுமணப்பட்டி, திருமயம் அருகே லெம்பலக்குடி ஆகிய இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப். 12 -ம்தேதி முதல் சுங்க வரி வசூல் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குனர் சார்பில் அறிவிப்பு வெளியானது.

பணிகள் முற்றுப்பெறாமல் உள்ள நிலையில் அங்கு சுங்கவரி வசூலிக்கும் நடவடிக்கைக்கு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.