Nagaratharonline.com
 
திருப்​ப​ரங்​குன்​றம் முரு​கன் கோயி​லில் ஜனவரி​ 26 தெப்​பத் திரு​விழா  Jan 17, 10
 
திருப்​ப​ரங்​குன்​றத்​தில் ஜன​வரி 26-ம் தேதி தெப்​பத் திரு​விழா நடை​பெ​று​கி​றது.​

​ ​ திருப்​ப​ரங்​குன்​றம் அருள்​மிகு சுப்​பி​ர​மணி சுவாமி கோயி​லில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாள் தெப்​பத் திரு​விழா வெகு​வி​ம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும்.​ இந்த ஆண்டு தெப்​பத் திரு​விழா ஞாயிற்​றுக்​கி​ழமை கொடி​யேற்​றத்​து​டன் தொடங்​கு​கி​றது.​

​ ​ கம்​பத்​தடி மண்​ட​பத்​தில் காலை 9 மணி முதல் 9.30 மணிக்​குள் கும்ப லக்​னத்​தில் ​ தெப்​பத் திரு​வி​ழா​வுக்​கான கொடி​யேற்​றம் நடை​பெ​றும்.​

​ ​ விழா​வை​யொட்டி தின​மும் சுவாமி தெய்​வா​னை​யு​டன் காலை​யில் தங்​கச் சப்​ப​ரத்​தி​லும்,​​ மாலை மயில் வாக​னம்,​​ பூத வாக​னம்,​​ அன்ன வாக​னம்,​​ சேஷ வாக​னம்,​​ குதிரை வாக​னம் உள்​பட பல்​வேறு வாக​னங்​க​ளில் திரு​வீதி உலா நடை​பெ​றும்.​

​ ​ ஜன​வரி 25-ம் தேதி தை கார்த்​தி​கை​யை​யொட்டி காலை 9 மணிக்கு தெப்​பம் முட்​டுத் தள்​ளும் நிகழ்ச்​சி​யும்,​​ 11 மணிக்கு சிறிய வைரத் தேரோட்​ட​மும் நடை​பெ​றும்.​

​ ​ முக்​கிய நிகழ்ச்​சி​யாக ஜன​வரி 26-ம் தேதி காலை 10.45 மணிக்கு தெப்​பத்​தில் சுவாமி தெய்​வா​னை​யு​டன் வலம் வரும் நிகழ்ச்​சி​யும்,​​ இரவு 7 மணிக்கு மைய மண்​ட​பத்​தில் உலா வரு​வ​த​லும்,​​ இரவு 8 மணிக்கு தெப்​பத்​தில் மின்​னொ​ளி​யில் வலம் வரும் நிகழ்ச்​சி​யும் நடை​பெ​றும்.​

​ ​

source : Dinamani​