Nagaratharonline.com
 
சென்னையில் கடும் குளிர்  Feb 9, 14
 
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் சென்னை ஊட்டி போல உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கடுங்குளிர் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியது:

இந்தியாவில் பருவகால மழைகாலத்துக்கும், கோடைகாலத்துக்கும் இடையில் பனிக்காலம் வருகிறது. தற்போது இந்தப் பனிக்காலம் தான் நடந்து கொண்டிருக்கிறது.

சாதாரணமாக மேகங்கள் மேலிருந்து வரும் சூரியனின் கதிர்கள், பனிக்காற்று போன்றவற்றை ஈர்த்து குறைந்த அளவே பூமிக்கு அனுப்பும். ஆனால் தற்போது மேகங்கள் மிகக்குறைவாக இருப்பதால் பனிக்காற்றினை ஈர்க்க இயலவில்லை. இதனால் பனிக்காற்று அதிகமாக வீசுகிறது. ஆதலால் கடுமையான குளிர் காணப்படுகிறது. இந்த நிலை பிப்ரவரி 20 வரை தொடரும். அதன் பிறகு கோடைக்காலத்துக்கான அறிகுறி தொடங்கும் வரை இதே நிலையே நீடிக்கும் எனக் கூறினர்.