Nagaratharonline.com
 
மெய்யப்பன் அறக்கட்டளை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு  Feb 8, 14
 
மெய்யப்பன் அறக்கட்டளை வழங்கும் தமிழறிஞர் விருது மற்றும் சிறந்த தமிழ் நூலாசிரியர்கள் மற்றும் சிறந்த பதிப்பகத்தாருக்கான பரிசுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பனின் பிறந்தநாளையொட்டி, மெய்யப்பன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் தமிழறிஞர் விருதும், தலா இரண்டு சிறந்த தமிழ் நூலாசிரியர்கள் மற்றும் சிறந்த பதிப்பகத்தாருக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது, பரிசுகளைப் பெற விரும்புவோர் தங்கள் படைப்புகளை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108 என்ற முகவரிக்கு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் ஆசிரியரோ, பதிப்பகத்தாரோ, 2013-ஆம் ஆண்டு வெளிவந்த தங்கள் முதற்பதிப்பு நூல்களின் மூன்று பிரதிகளை மட்டும் அனுப்ப வேண்டும்.

படைப்புகளின் அடிப்படையில் தமிழறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.10 ஆயிரமும், சிறந்த தமிழ் நுôலாசிரியர் இருவருக்கு தலா ரூ.5,000 மற்றும் சிறந்த பதிப்பகத்தார் இருவருக்கு தலா ரூ.2,500 பணப் பரிசும், ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் மெய்யப்பனின் பிறந்தநாள் விழாவில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 2536 1039 என்ற எண்ணில் பெறலாம்.