Nagaratharonline.com
 
உலகம்பட்டியில் ஆச்சியின் நகை பறிப்பு  Feb 8, 14
 
உலகம்பட்டியில் ரோட்டில் நடந்து சென்ற ஆச்சியிடம் டூவீலரில் வந்தவர் நகையை பறித்து தப்பினார்.

இவ்வூரைச் சேர்ந்த முத்தையா மனைவி விசாலாட்சி 64. இவர் ஞானியார் மடம் கோயிலுக்கு சாமி கும்பிடசென்றார். எஸ்.புதூர் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்தவர் விசாலாட்சியை மறித்து கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றார். உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் இளவரசன் விசாரிக்கிறார்.