Nagaratharonline.com
 
JAN 28-இல் பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா: கலாம் பங்கேற்கிறார்  Jan 22, 14
 
 
28-ஆம் தேதி பாம்பன் பால நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கிறார்.

மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதியோடு 100 ஆண்டுகள் நிறைவுடைய உள்ளன. இதை நூற்றாண்டு விழாவாக நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழவை பாம்பன் பகுதியிலே நடத்த வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நூற்றாண்டு விழாவை ஜன. 28ஆம் தேதி பாம்பன் ரயில்வே நிலையத்தின் அருகே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.