Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  Jan 22, 14
 
பொன்னமராவதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடையை மீறி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்டவைகளை பேரூராட்சி பணியாளர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின்படி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் வ. சுலைமான் சேட் அறிவுறுத்தலின் பேரில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் தடையை மீறி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 112 கிலோ பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.