Nagaratharonline.com
 
கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளியில்,முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  Jan 18, 14
 
கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளியில், 1983-லிருந்து, 2010 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது.


ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் பணியாற்றும் திரிபுர சுந்தரி கூறியதாவது: சிறு வயதிலிருந்து இந்த பள்ளியில் படித்துள்ளேன். வாழ்வின் கலைகளை கற்றுக் கொடுத்தது இந்த பள்ளி தான்.ஆசிரியர்கள் எங்களுக்கு குருவாக இருந்தனர்.பயாலஜி குரூப்பில் படித்த 36 பேரும், இன்று நல்ல நிலையில், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வருகிறோம். இதில் 23 பேர் இன்ஜினியர்,11 பேர் டாக்டர், 3 பேர் மற்றும் கலை மற்றும் அறிவியல் பயின்றவர்கள். இந்த சந்திப்பு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, என்றார். நிகழ்ச்சியை முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி முதல்வர் முருகேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரி, பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.