Nagaratharonline.com
 
தேவகோட்டை அருகே ஆராவயல் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை; கலெக்டர் உத்தரவு  Jan 15, 10
 
தேவகோட்டை அருகே ஆராவயல் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு, குதிரை வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது வன விலங்கு ஆர்வலர்கள் இந்த விளையாட்டினை தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை எதிர்த்து ஐக்கிய கம்யூனிஸ்டு மாநில பொதுச்செயலாளர் சந்திரன் மனு செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீமன், அக்பர்அலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், கடந்த 5 ஆண்டுகளாக நடத்திய ஆவணங்களை காட்டி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறலாம். அதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்யலாம் என்று கூறி இருந்தனர்

இதுகுறித்து கலெக்டர் மகேசன்காசிராஜன் கூறி உள்ள தனது உத்தரவில் ஆராவயல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் இன கலவரம் நடக்கும் இடம் என்பது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கிடையாது என்று கூறி உள்ளார்.


source : Maalai malar