Nagaratharonline.com
 
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி விழா  Jan 14, 14
 
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

மகரஜோதியை முன்னிட்டு 20-ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறந்திருக்கும். விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறி, காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணிவரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம். இத்தகவலை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் தலைவர் எம்.ஏ.எம்.ராமசாமி தெரிவித்துள்ளார்.