Nagaratharonline.com
 
நெற்குப்பை செட்டிஊரணி ரூ.48.5 லட்சத்தில், மேம்பாடு  Jan 14, 14
 
நெற்குப்பை பேரூராட்சி, நவணிக்களத்தில் உள்ள செட்டிஊரணி ரூ.48.5 லட்சத்தில், புனரமைக்கப்பட உள்ளது.

பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, செயல்அலுவலர் சங்கரநாராயணன் கூறியதாவது; தற்போது சிறிய பகுதியைத் தவிர, மண்ணாலான கரையுடன் இந்த ஊரணி உள்ளது. ஊரணியை மேம்படுத்த, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 48.5 லட்சம் நிதி வந்துள்ளது. கான்கிரீட் சுவரில் கரை, படித்துறைகள் கட்டப்படும். பராமரிப்பின்றி இருந்த, ராஜவீதி ரூ.29 லட்சத்தில் சிமிண்ட் ரோடாக மாற்றப்படும், என்றனர்.