Nagaratharonline.com
 
பழநியில் முடிகாணிக்கைக்கு கூடுதல்...வசூல்  Jan 13, 14
 
பழநிகோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, முடிகாணிக்கை நிலையத்தில், பக்தர்களிடம் கூடுதலாக வசூல் செய்கின்றனர்.இங்கு முடிகாணிக்கை செலுத்த ரூ.10க்கு ரசீது தருகின்றனர்.
முடிகாணிக்கை முடிந்தவுடன் பக்தர்களிடம் ரூ.70 முதல் ரூ.100 வரை கூடுதலாக வசூல் செய்கின்றனர். இது குறித்து பலமுறை கோயில் நிர்வாகத்திற்கு புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


ஆண்டிற்கு பலகோடி வருவாய் உள்ள பழநிகோயிலில், திருப்பதி போல இலவசமாக பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து எழுமலை பக்தர் முருகன் கூறுகையில்,"ஒவ்வொரு ஆண்டும், பழநிகோயிலுக்கு தைப்பூச விழாவிற்கு வருகிறோம்.
மொட்டையடிக்க ரூ.10 "டோக்கன்' வாங்குகிறோம். ஆனால், குழந்தைகளுக்கு ரூ.100 கேட்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.