Nagaratharonline.com
 
பிப்.1 முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப  Jan 11, 14
 
பிப்.1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியி்ட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

சென்னையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரைக்கு காலை 7.45 வந்து சேர்கிறது. இங்கிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு 1.15 மணிக்கு சென்றடையும். அதையடுத்து, செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மானாமதுரைக்கு வந்தடையும். பின் இங்கிருந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும்.