Nagaratharonline.com
 
322 நகரத்தார் காவடிகளுடன், பழநிக்கு பாதயாத்திரை  Jan 11, 14
 
ஒவ்வொரு ஆண்டும்,தைப்பூசத்தை முன்னிட்டு, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், பழநிக்கு காவடி எடுத்து பாதயாத்திரை பயணம் செல்வர்.கடந்த 400 ஆண்டுகளாக இந்த பாதயாத்திரை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
செட்டிநாட்டு பகுதிகள் என அழைக்கப்படும், சொக்கலிங்கம்புதூர், தேவகோட்டை, காரைக்குடி, ஆத்தங்குடி, பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம், கண்டனூர், கல்லல், அரண்மனை சிறுவயல், உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள், குன்றக்குடியில் நேற்று முன்தினம் ஒன்று கூடி, அங்கிருந்து,நேற்று காலை ஒன்றாக புறப்பட்டனர்.
மருதப்பட்டி, சமுத்திராபட்டி, கொசவபட்டி, செம்மடபட்டி, கலிங்கபையா ஊரணி வழியாக, பழநியை, வரும் 16ம் தேதி சென்றடைவர்.
நகரத்தார்கள் வருகிற,19ம் தேதி காவடியை செலுத்துவார்கள். நேற்று குன்றக்குடியில் இருந்து 322 நகரத்தார் காவடி, சென்றது.