Nagaratharonline.com
 
பஸ்சில் பயணித்த, கல்லலைச் சேர்ந்தவர் மரணம்  Jan 11, 14
 
கல்லலைச் சேர்ந்த முருகப்பன் மகன் அழகப்பன்,62.இவர் நேற்று காரைக்குடியிலிருந்து பாகனேரிக்கு சென்ற டவுன் பஸ்சில் கல்லலுக்கு திரும்பினார். கல்லல் பஸ் ஸ்டாண்டில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் அழகப்பன் மட்டும் இறங்காமல் அமர்ந்திருந்தார்.கண்டக்டர் எழுப்பிய போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. கல்லல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை செய்தனர். அழகப்பனின் மனைவி விசாலாட்சி தனது கணவர் எற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகதெரிவித்து உடலை பெற்று கொண்டார்.