Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்  Jan 1, 14
 
அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். சுவாமி பள்ளி எழுச்சிக்குப் பின்னர் பக்தர்கள் கற்பக விநாயகரை தரிசிக்கத் துவங்கினர். காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கக் கவசத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதி அருகே, வெள்ளி மூஷிகவாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை முதல் கோயில்
குளக்கரையைச் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் காணப்பட்டனர். கோயிலின் அருகே நிழற்கூடாரத்தில் ஐந்து வரிசைகளில் பக்தர்கள் கோயிலினுள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் கோயில் ரோட்டில் அனுமதிக்கப்படாமல், வேறு இடங்களில் நிறுத்தப்பட்டதால், நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.