Nagaratharonline.com
 
அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியில் பழைய மாணவர்கள் சார்பில் புதிய கட்டடம் திறப்பு  Dec 29, 13
 
காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1984-1988 ஆம் ஆண்டுகளில் பயின்ற பழைய மாணவர்கள் கல்லூரி முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வெள்ளிவிழா மற்றும் பழைய மாணவர்கள் சார்பில் கட்டப்பட்டுள்ள விடுதி முதல் தள கட்டடத் திறப்புவிழா மற்றும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

கல்லூரி விடுதிக்கு ரூ. 38 லட்சம் செலவில் பழைய மாணவர்கள் சார்பில் முதல் தளம் கட்டித்தரப்பட்டுள்ளது. கட்டடத் திறப்பு விழாவில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பழைய மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள நிறுவனர் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் பழைய மாணவர்கள் 165 பேர் பங்கேற்றதாக அமைப் பாளர் தெரிவித்தார். விழாவில் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றமும் நடைபெற்றது.