Nagaratharonline.com
 
புத்தாண்டு தினத்தில் வைர கிரீடத்தில் ஜொலிக்கப் போகும் மதுரை மீனாட்சி : கருமுத்து கண்ணன்  Dec 28, 13
 
 
புத்தாண்டு தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடமும், சுந்தரேஸ்வர்ருக்கு வைரப்பட்டையும் அணிவிக்கப்படும் என கோவில் தக்கார் கூறியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. மார்கழி மாதம் அதிகாலை நடை திறந்து, 12 மணிக்கு அடைக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் கூட்டம் காரணமாக நடை அடைக்க தாமதமாகிறது. இலவச தரிசனம் செய்யும் வழியில் கூட்டம் அதிகமாக இருந்தால், சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நிறுத்தி, இலவச தரிசன பக்தர்களை இரு வழிகளிலும் விரைவாக தரிசனம் செய்ய வைக்கிறோம். வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு அன்று கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பூ அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வைரக் கிரீடமும், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும்.