Nagaratharonline.com
 
கல்லல் நகரச் சிவன்கோயிலில் உழவாரப்பணி  Dec 26, 13
 
கல்லல் நகரச் சிவன்கோயிலில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் உழவாரப்பணிகள் நடைபெற்றன.

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட் டன. முகாமின் ஒரு பகுதியாக கல்லல் நகரச் சிவன் கோயிலில் என்.சி.சி மாணவர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

கோயில் வளாகத்தைச் சுற்றிலும் இருந்த முள் செடிகள் மற்றும் புதர்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர்.