Nagaratharonline.com
 
சென்னையில் பச்சை நிற ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு கொசு வலை விநியோகம் தொடங்கியது  Dec 24, 13
 
சென்னையில் பச்சை நிற ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் இலவச கொசு வலைகளை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மாநகராட்சி சார்பில் இலவச கொசு வலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னையில் கொசு வலைகளை விநியோகிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளன. இப்போது நீர்வழிப்பாதைகளில் வசிக்கும், பச்சை நிற ரேஷன் அட்டை வைத்துள்ளோருக்கு மட்டும் வலைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

படிப்படியாக அனைத்து மண்டலங்களிலும் கொசு வலைகள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.