Nagaratharonline.com
 
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை  Dec 21, 13
 
காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டினுள் புகுந்த திருடர்கள், பீரோவில் இருந்த 26 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் ரோட்டில் வசிப்பவர் மெய்யம்மை,41. இவரது பூர்வீக வீடு, காரைக்குடி முத்துப்பட்டணம் சன்னதி தெருவில் உள்ளது. இவரது தந்தை, தாய், தம்பி, அண்ணன் ஆகியோர் மலேசியாவில் உள்ளனர். இவர்கள், கடந்த ஆக.31ம் தேதி இங்கு வந்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். வீடு அவரது சித்தப்பா, பழனியப்பன் பராமரிப்பில் இருந்துள்ளது. அவர், நேற்று முன்தினம் வீட்டை திறந்து பார்த்துள்ளார். வீட்டின் உள் அறை திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது. மெய்யம்மைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 16 பவுன் கழுத்திரு, 10 பவுன் தங்க காசு, வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது. திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம்.