Nagaratharonline.com
 
பாகனேரி வீடுகளில் பகலில் நோட்டம் இரவில் திருட்டு நடத்திய தம்பதி கைது ரூ.7.5 லட்சம் நகை மீட்பு  Dec 16, 13
 
பாகனேரியில், வீடுகளில் நகை, வெள்ளிபொருட்களை திருடிய, கணவன், மனைவியை போலீசார் கைது செய்து, ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். சிவகங்கை அருகே பாகனேரியை சேர்ந்தவர்கள் சொக்கலிங்கம், செந்தில் உட்பட 9 பேரின் வீடுகளில், கடந்த 3 மாதங்களாக, தொடர் திருட்டு நடந்தது. அலவாக்கோட்டையில் வீட்டில் இருந்த வெள்ளி, தங்கம் உள்ளிட்டவைகளை திருடினர்.

இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், இத்திருட்டுக்களில், பெண்கள் கட்டாயம் ஈடுபட்டிருக்கவேண்டும் என சந்தேகித்தனர்.

பகலில் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் திருடும் இக்கும்பல், கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அங்கு பதுங்கியிருந்த, சிவகங்கை அருகே அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்,24, இவரது 2வது மனைவி மீனாட்சி,18, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 16 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி சாமான்கள், "லேப்டாப்' உட்பட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.