|
காரைக்குடியில் 15 பவுன் நகை கொள்ளை Dec 13, 13 |
|
காரைக்குடியில் ஆளில்லாத வீட்டில் புகுந்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள,15 பவுன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டார். காரைக்குடி ஆறுமுகநகரை சேர்ந்தவர் விசாலாட்சி,48. இவர் நேற்று காலை, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ஆனந்தி,30 என்பவருடன், பட்டமங்கலம் செல்வதற்காக வீட்டை பூட்டி சென்றுள்ளார்.
மதியம் 2 மணிக்கு, திரும்பி வந்து போது, வீடு திறந்து கிடந்துள்ளது. பீரோ உடைக்கப்பட்டு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள, 15 பவுன் நகை, வைர பிரேஸ்லட் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. |
|
|
|
|
|