Nagaratharonline.com
 
வேந்தன்பட்டி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலர் தாற்காலிக பணிநீக்கம்  Dec 7, 13
 
வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக சங்கச் செயலர் மற்றும் அலுவலக உதவியாளர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு நகை அடமானத்தின் பேரில் விவசாயக்கடன், குறுகிய, மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களாக விவசாயிகளுக்கு நகைக்கடன் மற்றும் விதை நெல், உரம் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம விவசாயிகள் வங்கியை அணுகியபோது, நகைக்கடன் மற்றும் உரம் இருப்பில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளதால் கடன் வழங்குவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் எனக்கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் சதீஸ்குமார் ஆய்வு மேற்கொண்டதில், முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் முறைகேட்டில் ஈடுபட்டது சங்கச் செயலர் மாயழகு மற்றும் அலுவலக உதவியாளர் செல்வம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.