Nagaratharonline.com
 
தேவகோட்டை : வைர ரத்தினவேல் மகேஸ்வர பூஜை  Dec 7, 13
 
தேவகோட்டை நைனப்ப ஐயா என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வைரக்கற்களுடன் ரத்தினகற்களால் ஆன ரத்தினவேல் செய்யப்பட்டது. இந்த வேல் தான் பழநி பாதயாத்திரையின் போது கொண்டு செல்லப்படும்.வேறு எங்கும் வேல் கொண்டு செல்வதில்லை.300 ஆண்டு ஆனதால், வேல் கற்கள் பெயர்ந்து இருந்தது.மீண்டும் நைனப்ப ஐயா குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்டது. நேற்று காலை புதுப்பிக்கப்பட்ட ரத்தினவேல் நைனப்ப ஐயா இல்லத்தில் இருந்து, தேனப்பன் ஊர்வலமாக எடுத்து வந்தார். நகர பள்ளிக்கூடத்தில் உள்ள முருகனுக்கு சாத்தப்பட்டு மகேஸ்வர பூஜை செய்தனர்.