Nagaratharonline.com
 
காரில் சீட் பெல்ட் : 8-ஆம் தேதி வரை கெடு  Dec 2, 13
 
காரில் முன்இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடமும், வாகன ஓட்டுநர்களிடம் போலீஸார் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்து பிடிபட்டால் முதல்முறை ரூ. 100 அபராதத்துடன் எச்சரிக்கப்படுவர்.

இரண்டாவது முறை அல்லது அதைத் தொடர்ந்து அதே நபர் பிடிபட்டால் ஒவ்வொரு முறையும் ரூ. 300 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.