Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் 5/12/2013 விரைவு பட்டா மாறுதல் முகாம்  Dec 2, 13
 
பொன்னமராவதியில் வரும் வியாழக்கிழமை ( டிச. 5) விரைவு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 5 -ம் தேதி மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமையில் நடைபெறவுள்ள விரைவு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது. இதில், பட்டா மாறுதல் தேவைப்படும் பொன்னமராவதி தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன், முகாம் நடைபெறும் நாளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளித்து, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முகாமில் அளிக்கப்படும் பட்டா மாறுதல் மனுக்களுக்கு முழுப்புலமாக இருப்பின் டிச. 20-ம் தேதியும், உட்பிரிவு இனங்களாக இருப்பின் 4.01.2014-ம் தேதியும் உரிய பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.