Nagaratharonline.com
 
திருப்புத்தூர் - குன்றக்குடி ரோட்டில் வளைவை சீரமைக்கும் பணி துவக்கம்  Nov 28, 13
 
திருப்புத்தூரிலிருந்து குன்றக்குடி வழியாக காரைக்குடி செல்லும் ரோட்டில் கும்மங்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி, குன்றக்குடி வரையிலான ரோட்டில் விபத்துக்களை ஏற்படுத்தும் வளைவுகளை அகலப்படுத்த ரூ 4.5 கோடியில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளைத் துவக்கியுள்ளனர். சுமார் 7.2 கி.மீ. நீளமுள்ள இந்த ரோட்டில், சுமார் 9 வளைவுகள், விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.

தற்போது, ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் அனுமதியாகி, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு, முதல் வளைவு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரோடு முழுமையாக புதுப்பிக்கப்படுவதுடன், வளைவுகள் அகலப்படுத்தப்பட்டு நேராக்கப்பட உள்ளது.