Nagaratharonline.com
 
தெக்கூர் -கண்டவராயன்பட்டி ரோட்டை சீரமைக்கக் கோரிக்கை  Nov 27, 13
 
கண்டவராயன்பட்டி- தெக்கூர் வரையிலான 7 கி.மீ.ரோடு மேம்படுத்தப்படாமல் உள்ளது.மேலும் பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காவனூர்,கண்டவராயன்பட்டி,வஞ்சினிப்பட்டி, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் டூ வீலர்களில் செல்பவர்கள், கீழே விழுந்து காயமடைவது தொடர்கிறது.இந்த ரோட்டைசீரமைக்க இப்பகுதி கிராமத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிவருகின்றனர்.