Nagaratharonline.com
 
NEWS REPORT: மூவார் நாட்டுக்கோட்டை நகரத்தார் அறப்பணிக்கழகம் சார்பில் ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கல்  Nov 26, 13
 
மூவார் நாட்டுக்கோட்டை நகரத்தார் அறப்பணிக்கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது.

புதுகையிலுள்ள மூவார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மூவார் நாட்டுக்கோட்டை நகரத்தார் அறப்பணிக் கழகத் தலைவர் பெ.சித.வி. சம்பந்தன் செட்டியார் தலைமை வகித்தார்.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 657 பேருக்கு ரூ. 42 லட்சம் கல்வி நிதியுதவியை வழங்கினார்.

இதில், கர்நாடக மாநில நகரத்தார் சங்கத் தலைவர் சி. வள்ளியப்பா, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், நிர்வாகிகள் எஸ். கார்த்திகேயன், சொக்கலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ரவிவீரப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, செயலர் வி.ச. சுந்தரேசன் வரவேற்றார். இணைச் செயலர் வயி. ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். மூவார் அறப்பணிக்கழக துணைத் தலைவர் வி.என்.சித. வள்ளியப்பன் நன்றி கூறினார்.