Nagaratharonline.com
 
பாகனேரியில் குடிநீர் ஊரணி சுத்தம் செய்த கிராம மக்கள்  Nov 24, 13
 
பாகனேரியில், குடிநீர் ஊரணியை கிராமத்து மக்களே தூர்வாரி செப்பனிட்டனர்.
பாகனேரி மக்களின் குடிநீர் ஆதாரமாக பட்டப்பிளான் ஊரணி உள்ளது. துவக்கத்தில், தனியார் குடிநீர் ஊரணி வெட்டி கொடுத்து, வரத்து கால்வாய்க்கென 10ஏக்கர் நிலத்தையும் வழங்கினர்.

இதை பராமரிக்க நிதி ஒதுக்காததால், ஊரணி பராமரிப்பின்றி, மழையும் இல்லாமல் போனதால், குறைந்தளவு தண்ணீர் தான் உள்ளது. எனவே, ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பினர், கிராமத்து மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, நேற்று காலை ஊரணியில் இருந்த கோரை புற்களையும், விஷச்செடிகளையும் அப்புறப்படுத்தினர்.